எனக்கு இது போதும்..! சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து பற்றி நாகர்ஜுனா கூரிய கருத்து..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் நாகார்ஜுனா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய ஆசை மகன் நாக சைத்தான்யாவை நடிகை சமந்தாவுடன் திருமணம் செய்து வைத்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நாத சைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள் பின்னர் குடும்பத்தின் ஒப்புதல் உடன் தான் திருமணம் செய்து கொண்டார்கள் ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்த நிலையில் கடந்த வருடம் அவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இவ்வாறு நடந்த சம்பவம் பல ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது எது எப்படியோ நடிகை சமந்தா தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருவது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகிக் கொண்டே இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகை சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனா சமீபத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார் அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நாகர்ஜுனாவிடம் சமந்தா விவாகரத்து குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்பொழுது நாகசைதன்யா மகிழ்ச்சியாக இருக்கிறார் அதை மட்டும் தான் பார்க்கிறேன் எனக்கு அது மட்டும் போதும் அவனுக்கு கிடைத்த அனுபவம் என்று இதனை நினைத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார் மேலும் அவர்களுடைய உறவு முறிந்து விட்டது இனிமேல் அதை பற்றி வருத்தப்படுவது முட்டாள்தனம் என கூறியுள்ளார்.

மேலும் அந்த செயல் எங்களுடைய வாழ்க்கையில் இருந்து நீங்கிவிட்டது அதேபோல எல்லோருடைய வாழ்க்கையில் இருந்தும் விலகிவிடும் என்று நாகர்ஜுனா கூறியது பலரையும் வியக்க வைத்தது.

Leave a Comment