புதிய புகைப்படத்தை வெளியிட்ட நதியா லைக்ஸ் போட்டு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள்.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதனால் மத்திய அரசும் மாநில அரசும் மீண்டும் சில கட்டுப்பாடு விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதிலும் பொதுமக்கள் அனைவரும் இனி வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து செல்லவும், பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் மக்கள் அதிகமாக கூடும் கடைவீதி, மால், திரையரங்கு ஆகியவற்றில் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சமூகவலைதளத்தில் மாஸ்க் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் 80 களின் கனவு கன்னியாக இருந்தவர் நதியா இவர் தமிழில் முதன்முதலாக பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.  தற்பொழுது இவருக்கு வயது ஆனாலும் இன்னும் இளம் நடிகைகளை போல் வலம் வருகிறார்.

இந்த நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காரில் அமர்ந்தபடி மாஸ்க் அணிந்து கொண்டு கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாகி வருகிறது.  அதனால் நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் போடாவிட்டாலும் மாஸ்க் அணிவது மறக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆதரவு தருவது மட்டுமல்லாமல் லைக் போட்டு வருகிறார்கள்.

nadhiya
nadhiya

Leave a Comment