விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.? நயன்தாராவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகர்

naanum rowdy dhaan : 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் நானும் ரவுடிதான் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா ஆர்ஜ பாலாஜி ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

படத்தில் நயன்தாரா காதுகேளாத பெண்ணாக நடித்திருப்பார். அதேபோல் ஆர் ஜே பாலாஜி காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் அதுமட்டுமல்லாமல் ராகுல் தாத்தா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படம் மிகவும் என்டர்டைன்மென்ட் திரைப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் பல வருடம் கழித்து இந்த திரைப்படத்தின் முக்கிய தகவல் கிடைத்துள்ளது, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்து சிம்பு தானாம். அதேபோல் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.

ஆனால் இந்த திரைப்படத்தின் கதை முதன்முதலில் சிம்புவிடம் தான் கூறப்பட்டது அதன் பிறகு சிம்பு நடித்தால் மீண்டும் நயன்தாராவுடன் சேர்ந்து விடுவார்கள் அதனால் நமக்கு தான் பிரச்சனை என சிம்புவுக்கு வந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்ததாம், இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அதனால் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு எடுத்து வருகிறார்கள், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயமாக இருந்தாலும் இருவரும் வெளிப்படையாக இதுவரை கூறியதில்லை இவர்களின் திருமணம் எப்போது என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தங்களது பொழுதை தனிமையில் கழித்து வருகிறார்கள் அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேத்தி வருகிறார்கள்.

Leave a Comment