என் அம்மா இறந்தப்ப கூட என்னை தாடி மீசை எடுக்க விடல… பாலாவை கிழித்து தொங்கவிட்ட நான் கடவுள் பட நடிகர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சிவ ஸ்ரீ சீனிவாசன் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் நான் கடவுள் இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, பூஜா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்திற்கு இளையராஜா தான் இசை அமைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நான் கடவுள் திரைப்படத்திற்கு ஜெகன்மோகன் வசனம் எழுதி இருந்தார்.

நான் கடவுள் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி தமிழகம் முழுவதும் 21 கோடி ரூபாய் வசூல் செய்தது அதேபோல் நான் கடவுள் திரைப்படம் ஏழாம் உலகம் என்ற புத்தகத்தை தழுவி கதை எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் ஆர்யாவின் அப்பாவாக பிரபல தயாரிப்பாளரான  அழகன் தமிழ்மணி என்பவர் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களை தயாரித்தவர்.

ஆர்யாவின் நான் கடவுள் திரைப்படத்தில் ஆர்யாவுக்கு அப்பாவாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை ஊடகத்திற்கு கொடுதுள்ளார் அந்த பேட்டியில் அவர் பேசிய தகவல் தான் ரசிகர்ளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் நான் கடவுள் திரைப்படத்தில் நடித்தது குறித்தும் பாலா குறித்தும் ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.

இந்த நிலையில் பாலா பிரபல தயாரிப்பாளர் நான் தமிழ்மணி அவர்களிடம் நீங்கள் நான் கடவுள் திரைப்படத்திற்கு நடிக்க வேண்டும் என கேட்டுள்ளார் அதற்கு தயாரிப்பாளர் தமிழ்மணி எனக்கு நடிப்பு தெரியாது நடிக்க தெரியாது எனக்கு கூறிஉள்ளார் நடிக்க தெரியாதவர்கள் தான் எனக்கு வேண்டும் எனக் கூறி நடிப்பதற்கு கேட்டார். அப்பொழுது தயாரிப்பாளர் தமிழ்மணிக்கு மிகவும் சந்தோஷம் அடைந்தார்.

இந்த நிலையில் பாலா தமிழ்மணி அவர்களை நீங்கள் தாடி மீசை உடன் இருக்க வேண்டும் அதனால் அதனை வளர்த்துக் கொள்ளுங்கள் என கூறினார் தமிழ்மணியும் தாடி மீசையை வளர்த்துக் கொண்டார் பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த திரைப்படத்தில் தமிழ்மணி நடித்திருந்தார் மூன்று வருடங்களாக எடுக்கப்பட்டது. அதற்காக மூன்று வருடமாக தாடி மீசையுடன் தான் இருந்தார்.

எங்களுடைய சமுதாயத்தில்  தாய் இறந்துவிட்டால் கொல்லி போடும் பிள்ளை மொட்டை அடித்து மீசை எடுத்த தான் கொல்லி சட்டியை தூக்க வேண்டும் என் அம்மாவுக்கு ஒரே பையன் இதனால் பலரும் இந்த சடங்கிற்காக பாலாவிடம் பேசி இருந்தார்கள் ஆனால் இயக்குனர் பாலா தாடி மீசை எடுத்து விட்டால் இந்த படத்தை எடுக்க இன்னொரு மூன்று வருடங்கள் ஆகும் அது சரியா என அவரிடம் கேட்டு சொல்லுங்கள் எனக் கூறிவிட்டார்.

பாலாவை விட்டால் இன்னும் மூன்று வருடம் இல்ல 30 வருடம் கூட படத்தை இயக்குவார் ஆனால் ஒரு தயாரிப்பாளர் கஷ்டம் எனக்கு தெரியும் அதனால் நான் தயாரிப்பாளரின் கஷ்டம் தெரிந்து என்னுடைய தாயார் இறுதிச் சடங்கிற்கு கூட மீசை எடுக்காமல மொட்டை அடிக்காமலும் கொள்ளி வைத்தேன் என்று அழுது கொண்டே பேட்டி கொடுத்தார். தயாரிப்பாளர்  தமிழ்மணி அப்பொழுது என்னோட நெஞ்சு எறிவது போல் ஒரு காலத்தில் நீயும் கஷ்டப்படுவாய் என்று அவருக்கு சாபம் விட்டேன் என கூறினார். அதனால்தான் இன்று பாலா இந்த நிலைமைக்கு இருக்கிறார்.

அதன் பிறகு எத்தனை படம் பாலம் எடுத்தார்? எதை கிழித்தார் என கடுமையாக பேசியுள்ளார் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார் எனவும் கூறியுள்ளார் இதற்கெல்லாம் காரணம் மற்றவர்களுக்கு நீ செய்த கொடுமை தான் உன்னை இந்த நிலைக்கு கொண்டு வைத்துள்ளது இந்த குணத்தை நீ மாற்றிக் கொள்ள வேண்டும் என பாலாவிற்கு அறிவுரையும் கூறியுள்ளார் அப்படி மாற்றிக் கொள்ளவில்லை என்றால் இன்னும் பட்டு தீர்வாய் எனவும் கூறியுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது

Leave a Comment