நான் ஈ பட வில்லனை கதாநாயகனாக மாற்றிய வெங்கட் பிரபு.! வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் சென்னை 28 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் வெங்கட்பிரபு. இவரது தந்தை இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் தான் கங்கை அமரன்இவரது மகன்தான் இயக்குனர் வெங்கட் பிரபு.

இவர் ஆரம்பத்தில் சென்னை 28 திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்தத் திரைப்படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். அவரின் தொடர்ந்து கோவா  என்ற திரைப்படத்தை இயக்கிய பின் இவர் இன்னும் உயரத்திற்குச் சென்றார். அதன்பிறகு தல அஜித்தின் 50-வது திரைப்படமான மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு இவர் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

வெங்கட் பிரபு சூர்யாவை வைத்து மாஸ் என்ற திரைப்படத்தை இயக்கினார் அதன்பிறகு சூர்யாவின் உடன்பிறந்த சகோதரரான கார்த்திகை வைத்து பிரியாணி என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த இரண்டு புறமும் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

தற்போது நடிகர் எஸ் டி ஆர் அதாவது சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. மாநாடு முடிந்த பின் அடுத்த அப்டேட்டிர்காக காத்திருந்த வெங்கட்பிரபு ரசிகர்களுக்காக ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளது வெங்கட்பிரபுவின் வட்டாரம்.

kiccha sudeep

வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படத்தில் ஒரு சில திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்றும் தென்னிந்திய அனைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அல்லது தமண் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version