விஜய் டிவியில் குடும்ப கதைகளை வைத்து தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.
இந்த சீரியல் நல்ல வரவேற்ப்பை பெற தொடங்கிய நிலையில் கொரோனா காரணத்தால் நிறுத்தப்பட்டது.
பிறகு அதே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு முற்றிலும் கதை வேறுபாடுள்ள புதிய நடிகர், நடிகைகளை வைத்து தொடங்கினார்கள்.
முதல் பாகத்தில் தாமரை கேரக்டரில் நடித்திருந்த ராஷ்மிகா தற்போது இரண்டாம் பாகத்திலும் சில காலங்களாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகாவிற்கு குடும்பத்தினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்பொழுது எடுத்த திருமண புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.