“மணிரத்தினம்” படத்தில் நடித்தால் போதும் எனது நீண்ட நாள் கனவு ஆசை தீர்ந்துவிடும் – தெலுங்கு நடிகர் பேச்சு.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் நானி. ராஜமௌலி இயக்கத்தில் நானி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் “நான் ஈ” இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு பேரையும் புகழையும் பெற்று கொண்டதைத் தொடர்ந்து தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன அவரும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து  நடித்து வருகிறார்.

அதுவும் தெலுங்கில் சொல்லவே வேண்டாம் இவர் சேர்ந்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக இருக்கின்றன கடைசியாக கூட டக் ஜெகதீஷ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வெற்றியை ருசித்த காரணத்தினால் தற்போது இவர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் நானி நடித்துள்ள திரைப்படம் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி போன்ற பலர் நடிக்கின்றனர் இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது டிரைலர் கூட சமீபத்தில் வெளிவந்து மிரட்டியது. இந்த நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நானி தெலுங்கு படங்கள் தமிழ் நாட்டில் தமிழ் படங்கள் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. என்னுடைய நடிப்பில் வெளியான நான் ஈ படம் தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுப்பதன் காரணமாக ரசிகர்கள் எனக்கு பெரும் ஆதரவை தற்போது தமிழில் கொடுத்து வருகின்றனர். தமிழில்  ஆஹா கல்யாணம், வெப்பம் போன்ற படங்களில் நடித்து இருந்தவர்.

naani
naani

ஆனால் அந்த படங்கள் வெற்றியை பெறாத காரணத்தினால் தெலுங்கு பக்கம் சென்றதாகவும் தெலுங்கில் நானி இப்பொழுது நடித்திருக்கும் ஷியாம் சிங்கா ராய்  தமிழில் வெளியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  மேலும் பேசிய நானி தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த இயக்குனர் மணிரத்தினம் என்றும் அவரது படத்தில் நடிப்பதே எனவே நீண்ட நாள் கனவு எனவும் தெரிவித்தார்.

Leave a Comment