என்னுடைய உயிர் அவங்களோடது.! திருமணம் வேண்டாம் என்று முடிவெடுத்த த்ரிஷா.. அவரே சொன்ன உண்மை தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா இருவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நடிகர் திரிஷா அவர்கள் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்காக ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

அப்படி கோயம்புத்தூரில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிஷாவை பார்த்து குந்தவைக்கு எப்போது சுயம்வரம் நடக்கும் எங்களை எப்போது அழைப்பீர்கள் என்று அங்கிருந்து ஆன்கர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் சுயம்வரம் என்னவென்று தெரியாமல் முழித்து வந்த திரிஷா திருமணம் என்றவுடன் ரசிகர்களை பார்த்து என்னுடைய உயிர் இவங்களுக்கு தான் என ஒரு செகண்ட் கூட யோசிக்காமல் கூறியிருக்கிறார். ஏற்கனவே இவருடைய திருமண விஷயம் பயங்கரமாக வெடித்து இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான ரங்கநாதன் அவர்கள் திரிஷா திருமணம் செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தனது youtube சேனல் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.

இப்படி இருக்கும் நிலையில் நடிகை திரிஷா அவர்கள் இனிமேல் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று உறுதியோடு இருக்கிறார் என்று அவர் கூறிய பிறகு தெரிய வருகிறது. அதன் பிறகு லியோ படத்தின் அப்டேட் வேண்டுமென்று ரசிகர்கள் கூச்சலிட்டார்கள்.

அதற்கு பதில் அளித்த திரிஷா தற்போது நான் லியோ ஷூட்டிங்கில் இருந்து தான் வருகிறேன் லோகேஷ் கனகராஜ் விஜய் சார் எல்லாம் நல்லா இருக்காங்க என்று கூறியிருக்கிறார் அதன் பிறகு வேறு எதுவும் என்னால் சொல்ல முடியாது என்றும் திரிஷா தெரிவித்து இருக்கிறார்.

மேலும் ஏற்கனவே லியோ திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் இடம் கேட்கும் போது கூட திரிஷாவே வந்து சொல்ல மாட்டார் என்று கூறியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் அங்கிருந்து கிளம்பும்போது கூட லியோ படம் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியே லீக்காகாமல் பார்த்துக்க வேண்டும் என்று பேசிக் கொண்டு தான் வந்தோம் என்று ஒருமுறை கூறியிருக்கிறார் அதை மனதில் வைத்துக் கொண்டு நடிகை திரிஷாவும் எந்த ஒரு தகவலையும் தன்னிடம் இருந்து லீக்காகாமல் பார்த்துக் கொண்டு வருகிறார்.

Leave a Comment