விஜய் படத்தில் நடித்ததற்காக சம்பளமே வாங்காமல் வந்த முரளி – என்ன காரணம் தெரியுமா.. பாராட்டும் ரசிகர்கள்.

90 காலகட்டங்களில் பல்வேறு கமர்சியல் படங்களை கொடுத்து  மக்களை மகிழ்வித்து வந்தவர் முன்னணி இயக்குனர் விக்ரமன். இவர் சூரியவம்சம், வானத்தைப்போல, பூவே உனக்காக, உன்னை நினைத்து போன்ற பல சிறப்பான படங்களை கொடுத்து அசத்தியவர். இயக்குனர் விக்ரமன் கடைசியாக நினைத்தது யாரோ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

அதன் பின் எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்கவில்லை என்றாலும் தன் படங்களில் நடந்த சில சிறப்பான நிகழ்வுகளை பேட்டிகளின் மூலம் கூறி வருகிறார். அப்படி பூவே உனக்காக திரைப்படத்தில் நடந்த சில சிறப்பான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். பூவே உனக்காக திரைப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்த இந்த படம்.

இளசுகள் தொடங்கி குடும்பத்தினர் வரை அனைவரையும் வெகுவாக இந்த படம் கவர்ந்திழுத்தது. பூவே உனக்காக படம் பல நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. அதேசமயம் வசூலிலும் நல்லதொரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து சங்கீதா, நாகேஷ், சார்லி, மலேசியா வாசுதேவன், நம்பியார், அஞ்சு அரவிந்த், மீசை முருகேசன் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.

இந்த படம் அப்பொழுது விஜய்க்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக இருந்தது. இந்த படத்தை தனக்கே உரிய பாணியில் விக்ரமன் எடுத்திருப்பார் இந்த படத்திற்கு எஸ். ஏ. ராஜகுமார் இசையமைத்திருந்தார் இந்த படத்தின் பாடல்களும் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. பூவே உனக்காக படத்தில் முரளி  ஒரு பாடலுக்காக மட்டும் நடனமாடி இருப்பார்.

சினிமாவில் ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் பின்னி பெடலெடுக்கும் முரளி பெரும்பாலும் படங்களில் நடனம் படுவதையே பெரிதும் தவிர்ப்பார் ஆனால் இயக்குனர் விக்ரமன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பூவே உனக்காக படத்தில் மச்சினிச்சி என்ற பாடலுக்காக ஆடியிருப்பார் மேலும் இந்த பாடலுக்கு நடனமாடியதற்காக சம்பளமும் வாங்கவில்லையாம் காரணம் நட்புக்காக அந்த பணத்தை வாங்க மறுத்து உள்ளார்.

 

Leave a Comment