மும்பை இந்தியன்ஸ் அணி அவ்வளவு எளிதில் தோற்கடிக்க முடியாது அதற்கு காரணம் இந்த பிரம்மாஸ்திரமே.. புகழ்ந்து தள்ளும் சேவாக்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டி தற்போது சீசன் செய்ததாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 14 வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளை சந்தித்துள்ளன இருப்பினும் ஒவ்வொரு ஆட்டத்திலும் அனல் பறக்கிறது.

அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 150 ரன்கள் எடுத்திருந்தது. சுலபமான இலக்கை எட்ட க ஹைதராபாத் அணி தொடக்திலேயே அதிரடியை காட்டியது ஒரு கட்டத்தில் இந்த அணி வெற்றியை ஈசியாக கைபற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் கடைசி 10 ஓவர்களில் கம்பேக் கொடுத்து அசத்தியது மேலும் தொடர் விக்கெட்டுகளை எடுத்து 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி கனியை ருசித்தது.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் மும்பை இந்தியன்ஸ் டீமை வாழ்த்து தெரிவித்தனர் அந்த வகையில் அதிரடி மன்னன் சேவாக் சமீபத்தில் பேட்டி கொடுத்தார் அதில் அவர் கூறியது : மும்பை இந்தியன்ஸ் அணியை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது அந்த அணிக்கு மிகப் பெரிய ஆஸ்திரம் ஒன்று இருக்கிறது.

அது இருக்கும் வரை அந்த அணியை தொட்டு பார்க்க கூட முடியாது அவர் யார் என்றால் “ஜாஸ்பர்ட் பும்ரா” தான் எந்த ஒரு அணியாக இருந்தாலும் தனது துல்லியமான பவுலின் மூலம் எதிர் வீரர்களை மிரட்டுகிறார் அதோடு மட்டுமல்லாமல் இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி வரும் போது 13 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றி உள்ளார் மேலும் இவரது ஒவ்வொரு எல்லோரும் சேர்ந்து ஒரு பௌண்டரி கூட எதிர் அணி வீரர்களால் அடிக்க முடியவில்லை.

இவர் இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸ் டீம் அவ்வளவு எளிதில் தோற்கடிக்க முடியாது என குறிப்பிட்டார் அதேபோல இவருக்கு உறுதுணையாக போல்ட் மற்றும் சஹர் ஆகியோர் இருப்பதால் அந்த அணிக்கு இன்னும் கூடுதல் பலமாக இருக்கிறது என குறிப்பிட்டார்.

Leave a Comment