பொன்னியின் செல்வன் படத்தை வாங்க தயக்கம் காட்டும் வீடியோஸ்தார்கள்..! படத்தில் மணிரத்தினம் செய்த பெரிய தப்பு.!

இயக்குனர் மணிரத்தினம் தனது சினிமா பயணத்தில் பெரிதும் நாவல் மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தான் பல படங்களை இயக்கி வெற்றிகொண்டு உள்ளார். அந்த வகையில் தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க மூன்று தடவை முயற்சித்து தோல்வியை சந்தித்தார்.

இருப்பினும் ஒரு வழியாக போராடி எப்படியோ 500 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்து வெற்றி கண்டுள்ளார் படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படம் மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர் நடிகைகள் நடித்து உள்ளனர் இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டீசரை வைத்து பார்க்கும் பொழுது நிச்சயம் பாகுபலி போல இந்த படமும் மிகப் பிரமாண்டமான ஒரு வெற்றியை ருசிக்கும் என பலரும் கூறியுள்ளனர் இதனால் மணிரத்தினமும் செம்ம சந்தோஷத்தில் இருந்து உள்ளார் ஆனால் தற்பொழுது பிஸ்னஸ் வேலைகள் பண்ணும் பொழுது தான் தெரிகிறது சற்று ஏமாந்து விட்டோம் என புலம்பி உள்ளார். காரணம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்கள்.

ஆனால் மற்ற மொழி பக்கங்களில் அந்த அளவுக்கு பிரபலம் கிடையாது அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழ்நாட்டை தாண்டி மற்ற இடங்களில் கம்மியாக இருப்பதாக தெரிகிறது. அதனால் மணிரத்தினம் சொல்லும் விலைக்கு எந்த ஒரு விநியோகஸ்தர்களும் வாங்க முன் வரவில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றவர்கள் நடித்திருந்தால்  விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகப்பெரிய ஒரு தொகைக்கு வாங்க..

முன் வந்திருப்பார்கள். அந்த விஷயத்தில் மணிரத்தினம் கோட்டை விட்டுவிட்டார். இளம் நடிகர்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்ததால் தற்பொழுது பிறமொழி பக்கங்களில் பிஸ்னஸ் எதிர்பார்த்த அளவுக்கு போகாமல் இருந்து வந்துள்ளதால் மண்டையை பிச்சி கொண்டு இருக்கிறாராம் மேலும் தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் என புலம்பி கொண்டிருக்கிறாராம்.

Leave a Comment