வீட்டில் முடங்கி கிடக்கும் “மொட்ட ராஜேந்திரன்” – அவருக்கு இப்படி ஒரு நிலைமையா.? வருத்தப்படும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா உலகில் திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பட வாய்ப்பு கைப்பற்றி அசத்துவார்கள் அந்த வகையில் மொட்ட ராஜேந்திரன் சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஸ்டண்ட் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.

மொட்ட ராஜேந்திரன் முதலில் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமானார் இதுவரை ஸ்டன்ட் கலைஞராக மட்டுமே சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். ஒரு கட்டத்தில் பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான நான் கடவுள் படத்தில் முக்கிய வில்லனாக நடித்து பிரபலமடைந்தார்.

அதன் பின் சினிமா உலகில் வில்லனாக சில காலம் நடிந்தாலும் ஒரு கட்டத்தில் காமெடியில் புகுந்து விளையாண்டார் இதனால் மொட்ட ராஜேந்திரனின் சினிமா பயணம் விரிவடைந்தது. அந்த சமயத்தில் இவர் அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களிலும் நடித்து ஓடினார். இதனால் அவரது வளர்ச்சி அமோகமாக இருந்தது இதன் காரணமாகவே..

தொடர்ந்து ஹீரோ, வில்லனாக என நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு போன்றவற்றிலும் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன வெற்றி மேல் வெற்றியை கண்டு வந்த மொட்ட ராஜேந்திரனுக்கு தற்பொழுது நடந்துள்ள சோகம் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

மொட்ட ராஜேந்திரனுக்கு தற்பொழுது சினிமா உலகில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதாம் திறமையான நடிகருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. மேலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் எங்கு இருக்கிறார் என்ன பண்ணுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இவரிடம் திறமையை அதிகம் இருக்கிறது நிச்சயம் மீண்டும் தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து ஆட்சி செய்வார் என பலரும் நம்பி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version