கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் இழந்து வருகிறார்கள் வயசு வித்தியாசம் இல்லாத அளவிற்கு இளம் வயதில் இருக்கும் பலர் மாரடைப்பு காரணமாக இறந்து வருகிறார்கள் இதுதான் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து ஒட்டுமொத்த திரைவுலகினர்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒன்று தான் சிரஞ்சீவியின் மரணம். உடல்நிலை சரியில்லை என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவர் பல வருடங்களாக காதலித்து நடிகை மேக்னா ராஜ் திருமணம் செய்து கொண்டவர். அந்தவகையில் மேக்னாராஜ் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சிரஞ்சீவி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தற்போது தான் மேக்னாராஜ் இருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை அவரின் அப்பா போட்டோ முன் விளையாடும் வீடியோக்கள் கூட இணையதளத்தில் வைரலானது. இப்படிப்பட்ட நிலையில் மேக்னா ராஜின் வீட்டில் இன்னொரு சோகம் நடந்துள்ளது. இதுகுறித்த ட்வீட் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மேக்னா ராஜ்.
அதாவது சிரஞ்சீவி இருக்கும் பொழுதிலிருந்து ஒரு நாய்க்குட்டியை இவர்கள் வளர்த்து வருகிறார்களாம். அந்த நாய்க்குட்டி சமீபத்தில் உயிரிழந்துள்ளது இது குறித்து தான் அந்த நாய்க்குட்டியை குறித்து நீ சிரஞ்சீவிடம் சென்று அடைவாய் என்று நம்புகிறேன் என்று கூறி உள்ளார்.