மாடல் அழகி ரோஷினியை தொடர்ந்து “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து வெளியேறயுள்ள முக்கிய பிரபலம்.? யார் தெரியுமா.?

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் மக்களின் மனம் கவர்ந்த தொடர்கள் என்றால் சில சீரியல்கள் தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர் அனைத்து குடும்பங்களிடையே பெரிதும் பிரபலமடைந்துள்ளது.

மேலும் இந்த சீரியல் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதிகண்ணம்மா சீரியல் தமிழ் சீரியல்களிலே டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னிலையில் வகிக்கும் சீரியல் ஆகும். இந்த தொடரில் பாரதி மற்றும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும்  பிரபலங்களுக்கு சோஷியல் மீடியாவில் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்து வேறு சில முக்கிய வாய்ப்புகளின் காரணமாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷிணி ஹரிப்ரியன் அண்மையில் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவர் தற்போது விஜய் டிவியில் நேற்று தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரோஷிணிக்கு பதில்  பாரதிகண்ணம்மா தொடரில் வினுஷாதேவி என்ற மாடலிங் பிரபலம் நடித்து வருகிறார். மேலும் இவரும் ரோஷினி இடத்தை சிறப்பாக நடித்து பாரதிகண்ணம்மா சீரியலின் டிஆர்பியை எகிற வைத்துள்ளார். பாரதி கண்ணம்மாவில் துணை கதாநாயகியாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி ஆரம்பத்தில் கண்ணம்மாவிற்கு வில்லியாக நடித்து வந்தாலும் பின்பு இவர் நல்லவராக மாறி கண்ணம்மாவிற்கு சப்போர்ட் பண்ணி வருகிறார்.

தற்போது கண்மணி குறித்து வெளிவந்த தகவல் என்னவென்றால் ரோஷிணியை தொடர்ந்து கண்மணியும் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளாராம். மேலும் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியலில் நாயகியாக அறிமுகமாக உள்ளாராம். அதனால் இந்த பாரதிகண்ணம்மா தொடரிலிருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றன இருந்தாலும் இது குறித்து கண்மணி இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை.

Leave a Comment