மறுபடியும் பேய்களை வைத்து படம் எடுக்கப் போகும் மிஸ்கின்..! பூஜையில் லீக்கான புகைப்படம் இதோ..!

mishkin latest movie pooja: தமிழ் திரை உலகில் திரைப்படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் நடிகராகவும் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வருபவர்தான் மிஷ்கின். இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம்  தான்  முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிசாசு எனும் திரைப்படத்தை இயக்கிய ஒட்டுமொத்த ரசிகர்களையும் பயம்புருத்தினார்.  இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதன் காரணமாக பல நடிகர்களும் மிஷ்கின் திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டார்கள். அந்தவகையில் துப்பரிவாளன் திரைப்படத்தை நடிகர் விஷாலை வைத்து இயக்கினார் இந்த திரைப்படம் மிஷ்கினுக்கு ஒரு சரித்திர திரைப்படமாக அமைந்தது.

மேலும் இது தொடர்ந்து விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 என்ற திரைப்படத்தை இயக்க நினைத்தார் ஆனால் விஷாலுக்கும் மிஷ்கின்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த திரைப்படத்தில் இருந்து மிஷ்கின் பாதியிலேயே வெளியேறி விட்டார்.

தற்போது மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் இந்த திரைப்படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் திண்டுக்கல்லில் எடுக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் பூஜை ஆரம்பித்த நிலையில் இந்த திரைப்படத்தின் பட படிப்பானது அடுத்த மாதம் தொடங்க போகிறது என படக்குழுவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

mishkin
mishkin
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment