ஒரு சின்ன வீடியோவை பார்த்து படத்தை கொடுத்த இயக்குனர்.! புகழின் உச்சியில் இருக்கும் நடிகை மிருனாளினி.

சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில்  உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன்.இந்த படம் வருகின்ற 23 ஆம் தேதி வெளியாகி மக்களின் ஆதரவைப் பெற ரெடியாக இருக்கிறது. இதற்கு முன்பாக இந்த படக்குழு செய்தியாளர்களை நேற்று நேரில் சந்தித்து.

இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.அதிலும் குறிப்பாக சத்யராஜ், சசிகுமார்,சரண்யா, மிருணாளினி, இயக்குனர் பொன்ராம், சிங்கம்புலி பலர் கலந்து கொண்டனர்.

இந்த திரைப்படத்தை பொன்ராம் எடுத்துள்ளார். இவர் இதற்கு முன்பாக தமிழில் பல ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா போன்ற கிராமத்து கமர்ஷியல் படங்களை கொடுத்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படமும் கிராமத்து சாயலில் உருவாகி உள்ளதால் அதிரி புதிரி ஹிட் அடிக்கும் என கூறப்படுகிறது. இந்த படம் குறித்து பேசிய நடிகை மிருணாளினி. இந்த படம் தனக்கு வந்தது என்னால் நம்ப முடியவில்லை காரணம் ஒரு சின்ன வீடியோவை பார்த்துவிட்டு படக்குழு என்னை நம்பி இந்த மிகப்பெரிய கதாபாத்திரத்தை கொடுத்துள்ளது அதிலும் குறிப்பாக இயக்குனர் பொன்ராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்தார்.

மேலும் பேசிய நடிகை மிருணாளினி இந்த திரைப்படத்திற்காக நான் மிகவும் காத்துக் கொண்டிருக்கிறேன் இந்த திரைப்படத்தில் பல ஜாம்பவான்கள் நடித்து உள்ளனர் அவர்களின் நடிப்பை பார்த்து அசந்து போய் உள்ளேன் மேலும் அவர்கள் எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடிச்சு தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன் என எனக்கு ஆசை இருந்தது அது இந்த திரைப்படத்தின் மூலம் நிறைவேறி விட்டது இந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் எனது நன்றி என மேலும் தெரிவித்தார்.

Leave a Comment