இயக்குனர் ராமுடன் கைகோர்த்த மிர்ச்சி சிவா.. அட்டகாசமான காம்போவுடன் உருவாக இருக்கும் திரைப்படம்..

தமிழ் சினிமாவில் சிறந்த குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இயக்குனர் ராம் இவர் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கவர்ந்தார். மேலும் இதனை அடுத்து ராமின் அடுத்த படம் தான் தங்க மீன்கள் தந்தை-மகள் பாச உறவினை உன்னதப்பூர்வமாக வெளிப்படுத்திய இந்த நிலையில் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது.

மேலும் 3 தேசிய விருதுகளையும் பெற்றது இதனை அடுத்து இவருடைய இயக்கத்தில் வெளிவந்த தரமணி மற்றும் பேரன்பு ஆகிய தமிழ் திரைப்படங்கள் வரலாற்றில் தனி ஒரு இடத்தை பிடித்து ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தது. இவ்வாறு வரிசையாக இவர் வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் முதன்முறையாக மலையாள நடிகர் நவீன் பாலி உடன் இணைந்து ஏழு மலை ஏழு கடல் என்ற திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார்.

இதில் நிவின் பாலி, சூர்யா, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியயிருக்கிறது. மேலும் தற்பொழுது இறுதி கட்டப் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. எனவே இயக்குனர் ராம் தன்னுடைய அடுத்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

அதாவது யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய புதிய திரைப்படத்தில் மிர்ச்சி சிவாவுடன் கைகோர்த்து உள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். மேலும் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இதனை அடுத்து செவன் சிஸ் செவன் ஹில்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாக இருக்கும் இந்த படத்தினை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வழங்குகிறது இந்நிலையில் இந்த படப்பிடிப்பு தற்போது பூஜை உடன் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் இதனை அதிகாரப்பூர்வமாக பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

Leave a Comment