பேயை காணோம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து திடீரென எஸ்கேப்பான மீரா மிதுன் – அதிர்ச்சியான படக்குழு பின் என்ன நடந்தது தெரியுமா.? உண்மையை உடைக்கும் இயக்குனர்.

மாடல் அழகியாக வலம் வந்த மீராமிதுன் ஒரு கட்டத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பயணித்தார் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானார்.

வெள்ளித்திரையில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்திலும் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் கெஸ்ட் ரோலில் நடித்த மீரா மிதுன்னுக்கு ஒரு கட்டத்தில் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காததால் விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களை வம்புக்கு இழுத்தார்.

மேலும் ஜாதி பிரச்சினையையும் அவர் கிளப்பி விட்டார் இதனால்  மீராமிதுன்னை பல்வேறு பிரச்சனைகளின் கீழ்  இவர் மீது கேஸ் பதியப்பட்டு ஒரு கட்டத்தில் போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர் சிறிது காலம் ஜெயிலில் கம்பி எண்ணி விட்டு வெளியே வந்த மீராமிதுன் ஏற்கனவே பாதியில் கிடப்பில் போட்ட பேயை  காணோம் படத்தில் மீண்டும் நடித்தார்.

சென்னையில் ஆரம்பத்தில் சூட்டிங் எடுக்கப்பட்டு வந்தது படத்தின் கதைக்கு ஏற்றபடி கொடைக்கானலில் சூட்டிங் எடுக்கப்பட்ட குழு ஏற்பாடு செய்து இருந்தது அங்கு படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் திடீரென இரவு நேரத்தில்  மீராமிதுன் ஆறு பேருடன் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டுப் போனாராம்.

இதனை அறிந்த தயாரிப்பாளர் இயக்குனரை அழைத்து மீரா மிதுன் போய்விட்டார் என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டனர் அதற்கு மீரா மிதுன் இல்லாததால் படத்தில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தி படத்தை ஒரு வழியாக எடுத்துள்ளனராம். மேலும் கொடைக்கானலில் பேயை காணோம் படத்தை எடுக்க போன கடைசியில் நடிக்க வந்த மீரா மீதும் காணாமல் போனதால் அவரை தேடினோம். என இயக்குனர் பிரஸ்மீட்டில் பேசி உள்ளார்.

Leave a Comment

Exit mobile version