MI vs CSK : இன்றைய போட்டியில் தீபக் சாஹர் விளையாடுவாரா.? விளக்கம் கொடுத்த மோயின் அலி

இந்தியாவில் ஐபிஎல் சீசன் வருடமாக நடைபெற்று வருகிறது அதன்படி 16 வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று இரவு 7:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் பல பரீட்சை  நடத்துகின்றன.

இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாக இருப்பதால் இன்றைய போட்டியில் யார் கை ஓங்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி.. மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசி உள்ளார்.

அதில் அவர் சொன்னது..  இரண்டு அணிகளுமே வெற்றி அணியாக இருக்கிறது இந்த இரண்டு அணிகளுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். சர்வதேச கிரிக்கெட்டுக்கு வெளியே இவ்விரண்டு அணிகள் மோதும் ஆட்டம் தான் மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. இதனை கால்பந்து பாணியில் சொல்ல வேண்டும் என்றால் மான்செஸ்டர் யுனைடெட், லிவர் போல் அணியை எதிர்கொள்வது போல் கருதலாம்..

எனவே இது மிகப் பெரிய போட்டியாக இருக்கும்.. தீபக் சாஹர் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை காரணம் அவர் காயத்திலிருந்து குணமடைந்து தற்பொழுது தான் கிரிக்கெட் விளையாடுகிறார். இது போன்ற போட்டிகளில் விளையாடும் பொழுது தான் தீபக் சாஹரின் பந்துவீச்சு மேம்பட வாய்ப்பு இருக்கிறது.

moeen ali
moeen ali

ஐபிஎல் தொடரில் தீபக்சாகர் அதிக போட்டிகளில் விளையாடி தன்னுடைய பார்மை மீட்டெடுப்பார் என கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர் தீபக்சாகர் பவர் பிளேவில் இரண்டு, மூன்று விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கக்கூடியவர் என அவரைப் பற்றி பெருமையாக பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது காட்டுதீ போல பரவி வருகிறது.

Leave a Comment