செத்துப் பிழைத்து உள்ளேன் மெர்சல் படத்தயாரிப்பாளர் வேதனை.! அப்படி என்ன சோகம்.?

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் மெஹா ஹிட் ஆனா  திரைப்படம் மெர்சல் இந்த திரைப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஹேமா ருக்மணி தயாரித்திருந்தார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக வேற எந்த திரைப்படமும் இன்னும் வெளியாகவில்லை.

இந்தநிலையில் ஹேமா ருக்மணி வீல் சேரில் உட்கார்ந்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, அதுமட்டுமல்லாமல் அதில் குறிப்பிட்டுள்ள வசனம்தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடுமையான உடல்நலக் குறைவால் மெர்சல் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அவதிப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது, ஹேமா ருக்குமணிக்கு கடல் உணவுவகைகள் ஒத்துக்கொள்ளாதாம். அதனால் இவர் உண்ணும் உணவை பார்த்து பார்த்து சாப்பிடுவாராம்.

ஆனால் சமீபத்தில் ஒரு திருமண விருந்தில் கடல் உணவு வகைகளை தவறுதலாக சாப்பிட்டு விட்டாராம் இதனால் அவருக்கு உடல் உபாதைகள் அதாவது அலர்ஜி  ஏற்பட்டு உள்ளது, அதனால் தற்போது நான் மறுஜென்மம் எடுத்து உள்ளேன் என்று வீல்சேரில் அமர்ந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment