மீண்டும் சூர்யாவின் தலையில் கை வைத்த நடிகை மீரா மிதுன்..! வண்ட வண்டயாக வார்த்தைகளை விட்ட ரசிகர்கள்..!

meeramithun speech about surya: சமீபகாலமாக சமூக வலை தளத்தில் சர்ச்சைகூறிய  நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மீரா மிதுன். இவர் முதன்முதலாக மாடலிங் துறையில் பணியாற்றி மிஸ் சவுத் என்னும் பட்டத்தை வென்றவர் அதன்பிறகு தன்னுடைய கேவலமான வழிமுறைகளின் காரணமாக அந்தப் பட்டம் பரி போய்விட்டது.

பின் விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக நடந்த வந்த ஜோடி நம்பர் 1 எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு படிப்படியாக சினிமாவுக்குள் நுழைய ஆரம்பித்துவிட்டார். இதை தொடர்ந்து அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மீரா மிகவும் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் இடையே பெரும் வெறுப்பை மட்டும் சம்பாதிக்க ஆரம்பித்தார்.

மேலும் சமீபத்தில் பிரபலங்களாக தேடி அவர்களை வம்புக்கு இழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தமன்னா,திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய், சூர்யா, ஜோதிகா அனைவரையும் தரக்குறைவாக பேசி ரசிகர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து நடிகை மீரா மிதுன் இதே போன்று பிரபலங்களை வாடிக்கையாக வம்புக்கு இழுத்து வருவதன் காரணமாக பிரபலங்களும் ரசிகர்களும் சரி அவரை திட்டி திட்டி அலுத்து போய் சமீபத்தில் தண்ணி தெளித்து விட்டு விட்டார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவை பற்றி மறுபடியும் தரக்குறைவாக நடிகை மீரா மிதுன் பேசியுள்ளார்.அதாவது அவர் கூறியது என்னவென்றால் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படமானது சரியான ப்ளாப் ஆகி விட்டது.

மேலும் இந்த திரைப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது இந்நிலையில் சூர்யா உஙகளுக்கு பணம் கொடுத்து இந்த திரைப்படத்தை பற்றி பெருமையாக எழுதச் சொன்னாரா? ஏன் இப்படி தவறான விஷயங்களை பரப்புகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளார்கள்.

meera mithun
meera mithun

Leave a Comment