கணவர் மறைந்து ஒரு வருடம் கூட ஆகல அதற்குள் மீனா இரண்டாவது திருமணமா.? எல்லாத்துக்கும் மீனா பெற்றோர்தான் காரணமா.? பகீர் தகவல்

முன்னணி நடிகையான மீனாவுக்கு அவருடைய குடும்பத்தினர்கள் இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதாவது நடிகை மீனாவின் கணவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் இவருக்கு இரண்டாவது திருமணம் கண்டிப்பாக செய்து வைக்க வேண்டும் என்பதில் இவருடைய குடும்பத்தினர்கள் உறுதியாக இருந்து வருகிறார்களாம்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக மாறி ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து கலக்கி இருந்தார். இவ்வாறு 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த இவர் ரஜினிகாந்தை தொடர்ந்து கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த இவர் பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். இவ்வாறு தொடர்ந்து வெற்றியை கண்டு வந்த மீனா ஒரு கட்டத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.

நைனிகா விஜய் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளிவந்த தெறி திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் மேலும் நைனிகா தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி அன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அதாவது இவருக்கு ஜனவரி மாதத்திலிருந்து நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் பிறகு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சில மாதங்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவ்வாறு நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் படிப்படியாக அனைத்து உறுப்புகளும் சேதமடைந்து வந்ததுள்ளது மேலும் இவருக்கு மாற்று நுரையீரல் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தார்கள் ஆனால் அவருக்கு நுரையீரல் கிடைக்கவில்லை என்பதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் திருமணமாகி 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்த மீனா பெரிதும் சோகத்தில் ஆழ்ந்தார். மேலும் இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு நடிகை மீனாவை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவருடைய தோழிகள் அடிக்கடி வீட்டிற்கு சென்று அவரை பார்ப்பது, அவுட்டிங் அழைத்து செல்வது என பல முயற்சிகளை செய்து வந்தனர் இதனால் தன்னுடைய நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதையும் மீனா தொடங்கினார். தற்பொழுது இயல்பான வாழ்க்கையில் இருந்து வரும் இவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் தற்பொழுது மீனாவிற்கு 46 வயது ஆனாலும் அவருக்கு மகள் இருக்கிறார் எனவே இவர்களுடைய எதிர்காலத்தை கருதி அவருடைய குடும்பத்தினர்கள் இந்த முடிவு எடுத்தால் உள்ளார்களாம் இதற்கு முன்பு மீனா ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது ஓகே சொல்லி உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment