40 வருடங்களாக இரண்டு முன்னணி இயக்குனரை ஒதுக்கி வைத்த நடிகை மீனா.! காரணம் இதுதானா என்று ஷாக்கான ரசிகர்கள்…

தென்னிந்திய சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் இளசுகளின் கனவு கன்னியாகவும் கொடிகட்டி பறந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி அதன் பிறகு ரஜினி, பிரபு, கமல், ராஜ்கிரன், முரளி, அஜித், விஜய், என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு நடிகை மீனா அவர்கள் சமீப காலங்களாக சரியான பட வாய்ப்பு எதுவும் அமையாதுதால் சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மீனா அவர்கள் சினிமாவில் அறிமுகம் ஆகி 40 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு சமீபத்தில் அவருக்கான பாராட்டு விழா நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல நடிகர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மீனாவை நடிகை சுகாசினி எடுத்த பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது அவர் கதாநாயகியாக அறிமுகமானதிலிருந்து தற்போது வரையிலும் நடந்த சுவாரசியமான தகவல்களை கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் 90களில் இயக்குனர்களாக பணியாற்றிய அனைவருடன் படத்திலும் நடித்து விட்டேன் ஆனால் இவர்களுடைய படத்தில் மட்டும் என்னால் நடிக்க முடியாமல் போனது அதாவது நடிகை மீனா பிஸியாக நடித்து கொண்டிருக்கும்போது பல வாய்ப்புகள் வந்தது.

ஆனால் சில காரணங்களால் என்னால் அதில் நடிக்க முடியாமல் போனதாக கூறியிருக்கிறார் அதிலும் குறிப்பாக அந்த வரிசையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இரு படங்களில் நடிக்க வேண்டியிருந்தது அதேபோல மணிரத்தினத்துடன் திருடா திருடி படத்தில் நடிக்க வேண்டியது ஆனால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு நான் அப்போது வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிருந்தேன் என்று கூறி இருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்டார் ரஜினிகாந்த் என்னிடம் வந்து மணிரத்தினம் வாய்ப்பு கேட்டும் வேண்டாம் என்று சொல்லிட்டியாமே என்று கிண்டலாக பேசி உள்ளார் என்றும் மீனா அவர்கள் கூறியிருக்கிறார்.

Leave a Comment