என்னை பப்புக்கு கூப்பிட்டாங்க.. ரகசியத்தை உடைக்கும் மீனா.!

Meena : நடிகை மீனா 1990 இல் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்தார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் தன்னுடைய சினிமா பயணத்தை குழந்தை நட்சத்திரமாக தென் இந்திய சினிமாவில் தொடங்கி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார் ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

மேலும் மீனா கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அதிலும் ரஜினி மீனா காம்போ எப்பொழுதும் எவர்கிரீன் இன்று வரை அது கொண்டாடப்பட்டு வருகிறது கிசுகிசுக்களில் சிக்காத நடிகையாக இருந்து மீனா சினிமாவின் உச்சத்தில் இருந்த பொழுது வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த இரண்டு தம்பதிகளுக்கும் நயனிகா என்ற மகள் இருக்கிறார் இவர் கூட விஜய் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் கடந்த வருடம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த மீனா தன்னுடைய இளமை காலம் குறித்து தன்னுடைய கணவர் குறித்தும் எமோஷனலாக பேசி உள்ளார். அதில் நடிகை மீனா தனக்கு இளம் வயதில் நிறைய பாய் ஃப்ரெண்ட் இருந்ததாகவும் அப்பொழுது பாய் ஃபிரண்ட் என்றால் என்ன என்று தெரியாது என்றும் கூறியுள்ளார்.

2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் சினிமாவில் எல்லாமே புதுசு புதுசாக மாறியது நிறைய புது புது நடிகர்கள் நடிகைகள் வந்தார்கள் மேலும் கிளிப்பிங், பப்பிங் என அப்பொழுதுதான் ஸ்டார்ட்டானது அந்த சமயத்தில் அவங்க பப்புக்கு போறாங்க நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று தன்னையும் அழைத்தார்கள் ஆனால் என்னுடைய அம்மாவிடம் கேட்டதற்கு அங்கே எல்லாம் போக கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிடுவார்.

இதற்காக பலமுறை என்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் எத்தனை முறை கேட்டாலும் அம்மா போகக்கூடாது என்று தான் சொல்வார் உன்னை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் எந்த ஒரு கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என்னுடைய அம்மா. ஆனால் அப்பொழுது நான் தனியாக இருந்ததே கிடையாது எப்பொழுதும் என் கூட யாராவது ஒரு ஆள் இருப்பாங்க.

ஆனால் என் கணவர் மறைந்த பிறகு வெளிநாட்டுக்கு கூட தனியாக தான் சென்று வருவதாகவும் இந்த சுதந்திரத்தையும் தைரியத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தது என்னுடைய கணவர் தான் எனக் கூறினார். அது மட்டும் இல்லாமல் மறைந்த வித்தியாசாகர் உங்கள் அம்மா சொன்னது சரிதான் இனி நீ அப்படி இருக்க வேண்டாம் என தன்னுடைய கணவர் தன்னிடம் கூறியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார். அதேபோல் எல்லாவற்றையும் எந்த ஒரு சூழ்நிலையும் ஒத்துக் கொள்ளக் கூடாது பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று தைரியமாக கூற வேண்டும் என சொல்லிக் கொடுத்தார் வித்தியாசாகர்.

தன்னுடைய கணவரே அப்படி கூறும் பொழுது என்னுடைய அம்மாவால் எதுவும் பேச முடியவில்லை என்னுடைய கணவரை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என மீனா கூறியுள்ளார்.