மாவீரன் படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வெளியேறிய முக்கிய பிரபலம்.! அடி மேல அடி வாங்கும் சிவகார்த்திகேயன்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் டிவி மூலம் பிரபலமான இவர் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தனுஷ் உடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்ட இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது அது மட்டுமல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பலவிதமான நஷ்டங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்வியை எப்படியாவது மாவீரன் திரைப்படத்தில் சரி கட்ட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார் அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்தின் ஒரு சில காட்சி சிவகார்த்திகேயனுக்கு பிடிக்காததால் ரீ சூட்டிங் வைக்க கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனாலயே இந்த படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது புதிய சிக்கலில் நடிகர் சிவகார்த்திகேயன் சிக்கி கொண்டு உள்ளார் அதாவது மாவீரன் திரைப்படத்திலிருந்து ஒரு முக்கிய பிரபலம் விலகி விட்டதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தின் ஒரு சில காட்சியை ரீ சூட்டிங் வைக்க சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது இதனால் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அன்பு செழியன் அவர்கள் ஏற்கனவே அதிக பணத்தை செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் ரீ சூட்டிங் என்பதால் இன்னும் அதிக பணம் தேவைப்படும் என்பதால் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக  கூறப்படுகிறது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயனை நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment