மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய மாவீரன் படக்குழு.? அதிதி சங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்..

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவர் அண்மைக்காலமாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் அந்த படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல்  வசூலில் 100 கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைக்கின்றன.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் ஆளுகின்றன. இருப்பினும் நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படம் இதுவரை மட்டுமே 40 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் தான் மாவீரன் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு புதிய கெட்டப்பில் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் ஹீரோயின்னாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜோராகப் போய்க் கொண்டிருந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சமூக வலைதள பக்கங்களில் பல தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக இயக்குனருக்கும், சிவ கார்த்திகேயனுக்கும் பிரச்சனை அதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என கூறினார்.

மேலும் பிரின்ஸ் படம் தோல்வியால் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என பலரும் பல்வேறு விதமாக பேசி வந்தனர்.  இதனால் மாவீரன் படபிடிப்பது தொடங்குமா தொடங்காத என பலரும் யோசித்துக் கொண்டிருந்த நிலையில்   நடிகை ஆதிதி சங்கர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். மேலும் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் கிரேட் டு பேக் ஆன் செட் மாவீரன் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

maveeran
maveeran

Leave a Comment