அடுத்த திருமணத்திற்கு ரெடியான மாஸ்டர் பட நடிகை.! அதுவும் 43 வயதில்.

தமிழ் சினிமாவில் 43 வயதாகும் நடிகையின் கணவர் கடந்த ஆண்டு இருந்ததால் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று இந்த நடிகை முடிவெடுத்துள்ளாராம் இந்த தகவல் தற்பொழுது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருக்கும் வயதிலேயே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை 48 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் எதிர்நீச்சல், ஜில்லா, பாட்ஷா, பிரேமம், சக்கபோடு போடு ராஜா உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சுரேகா வாணி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அப்படத்திலிருந்து இவர் நடித்திருந்த காட்சி நீக்கப்பட்டதால் பெரிதும் வருத்தப்பட்டார். ஆனால் அவருக்கு மகிழ்ச்சி தரும் விதமாக அப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி இணையதளத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.

இந்நிலையில் சுரேகா வாணி, சுரேஷ் தேஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் திடீரென்று 2019 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் சுரேஷ் தேஜா இறந்துவிட்டார். என்ன உடல்நிலை குறைவு என்று சுரேகா வாணி கூறவில்லை.

சுரேகா வாணி நிங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறிர்களா என்று கேட்டதற்கு. தற்பொழுது என் குடும்பம் மற்றும் என் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் இல்லை.  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

surekhavani-1
surekhavani-1

Leave a Comment