நயன்தாராவுக்கு திருமணம் முடிந்ததா.? நெற்றியில் இருக்கும் குங்குமத்தை பார்த்து ரசிகர்கள் சரமாரி கேள்வி.! வைரலாகும் வீடியோ

தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா, தற்போது இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள். அதற்கு காரணம் இவர் நடிக்கும் திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்து வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது ஊருக்கே தெரியும்.

ஆனால் திருமணம் எப்போது என்பதை இதுவரை அறிவிக்காமல் இருந்து வருகிறார்கள் நீண்ட காலமாக காதலித்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்  அடிக்கடி படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வெக்கேஷனுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக கோவில் கோவிலாக சென்று அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இவர்கள் கோவிலுக்குப் போனாலும் எப்பொழுது திருமணம் என்பதற்கு இதுவரை சரியான பதில் ஒன்றை கொடுக்காமல் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்பொழுது ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் சென்னையில் உள்ள பிரபல கோவிலில் எடுத்தது. அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் பிரபல கோவிலுக்கு சென்றுள்ளார்கள்.

அப்போது அங்கு இருக்கும் ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் அவர்களை புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்துள்ளார்கள் அந்த கூட்டத்திலும் நயன்தாராவை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார் விக்னேஷ் சிவன். கவனிக்க கூடிய முக்கியமான விஷயம் என்னவென்றால் கோவிலுக்கு சென்று மீண்டும் வருகையில் நயன்தாராவின் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறார்.

திருமணமான பெண்கள் மட்டும் தான் அங்கு குங்குமம் வைப்பார்கள் ஆனால் நயன்தாரா வைத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என சமூக வளைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment