கீர்த்தி சுரேஷ்க்கும் அனிருத்துக்கும் திருமணமா..? இணையத்தில் வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நமது நடிகை தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக திரைக்கு அறிமுகமானார் அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரஜினி முருகன் அரிமா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர ஆரம்பித்து விட்டார்.

இவருடைய நடிப்பில் மகாநதி என்ற திரைப்படம் உருவானது இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்ததன் மூலமாக தேசிய விருதை பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் உண்மையான சாவித்திரி ஆகவே வாழ்ந்து காட்டி பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

அதேபோல நமது நடிகை தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு ரெடியாக இருப்பதாகவும் தனக்கான கதைக்காக காத்திருப்பதாகவும் சமூக வலைதள பக்கத்தில் செய்திகள் உலவி வருகிறது.

நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணம் என்ற செய்தி சமூக வலைதள பக்கத்தில் வதந்தியாக பரவி வருகிறது ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பது வெறும் நட்புதான் என பலரும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளி வந்து வைரலாக பரவி வருகிறது.

aniruth keerthi
aniruth keerthi
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment