வாரிசு நடிகரை வைத்து பக்கா பிளான் போட்ட மாரி செல்வராஜ்.! வெளியான அப்டேட்…

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் இது குறித்து  எந்த ஒரு தகவலும் வராமல் இருக்கும் நிலையில் தற்போது அடுத்த படம் குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி பின்னர் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் மாரி செல்வராஜ் அதன் பிறகு கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்டர் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கம் அடுத்த படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கம் அடுத்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் இதில் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை தான் அடுத்ததாக மாறி செல்வராஜ் அவர்கள் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து தகவல்கள் கடந்த ஆண்டு வெளியானது. இந்த நிலையில் துருவி விக்ரம் அவர்கள் தற்போது இந்த படத்தில் நடிப்பதற்காக முழு ஈடுபாடு கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் மாரி செல்வராஜ் இயக்கம் இந்த திரைப்படம் கபடி போட்டியை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. துரு விக்ரம் ஆதித்யா வர்மா என்ற ரீமேக் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்அதன் பிறகு தனது அப்பாவுடன் அதாவது விக்ரமுடன் சேர்ந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் தனது அப்பாவுக்கு நிகராக நடித்திருப்பார்.

Leave a Comment