யாரும் எதிர் பார்க்காத அதீத தொகையை தூக்கி கொடுத்த சன் டிவி காலாநிதி மாறன்.! வாழ்த்தும் மக்கள்.

கொரோனா இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து உள்ளது இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

இதில் இருந்து மில மக்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே இதன் தாக்கம் குறையும் என்பதால் தற்போது விழிப்புணர்வு உள்ள வீடியோக்கள் பொது மக்கள் ஆங்காங்கே இருக்கும் இடங்களில் வீடியோ மற்றும் ஒளி பெருக்கியின் முலம் வெளியிடப்படுகிறது.

தன்னால் முடிந்தவற்றை தமிழக அரசும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது மேலும் சிறப்பாக செயல்படவும் மக்களை காத்திடவும் மற்றவர்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திரையுலகைச் சார்ந்தவர்கள் மற்றவர்களும் பலரும் தன்னால் முடிந்த காசோலைகளை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மிகப் பெரிய நிறுவனமான சன் நெட்வொர்க் நிறுவனம் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு தொகையை அள்ளிக் கொடுத்து உள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் இருந்து மக்களை காத்திட அதீத தொகை வேண்டும் என்பதை புரிந்து கொண்ட இந்த நிறுவனம் தற்போது சுமார் 10 கோடியை சன் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் பத்து கோடியை முதலமைச்சரை சந்தித்து நேரில் வழங்கினார்.

இச்செய்தி தற்பொழுது ஊடகங்கள் வாயிலாக வைரலாகி வருகின்றனர் மேலும் மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Leave a Comment