லியோ படத்தின் மொத்த ரகசியத்தையும் உளறி கொட்டிய மன்சூர் அலிகான்.! அடுத்த கட்டத்திற்கு திண்டாடும் லோகேஷ்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து காஷ்மீரில் படமாக்கப்பட்டு முடித்தவுடன் அடுத்ததாக படக்குழு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இருந்து திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் படமாக்கப்பட்ட போது படப்பிடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் சஞ்சய் தத் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அர்ஜுன், மன்சூர் அலிகான் காட்சிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல சுவாரசியமான தகவல்களை வெளிப்படையாக கூறி அனைத்தையும் உளறிக் கொட்டி விட்டார் இதனால் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்து வருவதாக கூறப்படுகிறது.

அதாவது மன்சூர் அலிகான் கூறியதாவது லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் படமாக்கப்பட்டு முடிந்தவுடன் அடுத்ததாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் தன்னை காஷ்மீரில் நடைபெற்ற படபிடிப்பிற்கு அழைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆகையால் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடக்கக்கூடிய படப்பிடிப்பில் கலந்து கொள்ள நிறைய வாய்ப்பு இருப்பதாக மன்சூர் அலிகான் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

பொதுவாக தன்னுடைய படத்தில் பல சஸ்பென்ஸ்களை வைத்து தான் காய் நகர்த்துகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆனால் அந்த ரகசியத்தை தற்போது மன்சூர் அலிகான் ஓப்பனாக கூறிவிட்டார் இதனால் அடுத்து லோகேஷ் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

Leave a Comment