ரஜினியைப் பற்றி மிகவும் தரக்குறைவாக பிரபல நடிகையுடன் பேசிய மனோரமா.? பின்பு நடிகர் ரஜினி செய்த செயலை பார்த்தீர்களா.

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தமிழகத்தில் அதிகமாக சேர்த்த நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் இவர் பல விதமான திரைப்படங்களில் நடித்து வயதானாலும் தற்போது இவரது நடிப்பிற்காக பல கோடி சம்பளம் பெற்று வருகிறார்.இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.

மேலும் இவரது நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பலரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்நிலையில் ரஜினி என்னதான் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவரைப் பற்றி பல சினிமா பிரபலங்கள் தரக்குறைவாக பேசி உள்ளார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் பல திரைப்படங்களில் அந்த காலத்தில் நிறைய முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்த நடிகை தான் மனோரமா இவர் ரஜினியை ஒரு முறை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து தரக்குறைவாக பேசியுள்ளார் என இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் ஜெயலலிதாவுடன் மனோரமா சேர்ந்து கொண்டு ஒரு மேடையில் ரஜினியைப் பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார் பின்பு இவருக்கு ஒரு கட்டத்தில் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் ரஜினிகாந்த் தான் தனது படத்தில் நடிப்பதற்காக இவரை அழைத்தாராம் இவரைப் பற்றி தவறாக பேசிவிட்டு பின்பு இவரது திரைப்படத்திலே நடிப்பதற்கு மனோரமா சம்மதித்து விட்டாராம்.

ரஜினி நடித்த அண்ணாமலை திரைப்படத்தில் மனோரமாவிற்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்க ரஜினிதான் சிபாரிசு செய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.ரஜினியை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசிய இவர் அதையெல்லாம் மறந்து விட்டு மீண்டும் ரஜினியின் திரைப்படத்தில் நடிக்க வந்துள்ளது ஒரு மிகப்பெரிய தைரியம் தான்.

rajini
rajini

என்னதான் தன்னைப் பற்றி கேவலமாக பேசினாலும் ரஜினி ஐயோ பாவும் என்று மீண்டும் இவரை தனது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தாராம். இதனையே பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக ரசிகர்களுக்கு கூறியதாகவும் இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment