மனோபாலா 40 வருடமாக ஒரே குடிதான்.? உண்மையை உடைத்த பிரபல நடிகர்.!

நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருந்த  மனோபாலா உடல் நலக்குறைவால் நேற்று திடீரென மரணம் அடைந்தார். இவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் மனோபாலாவின் உடலை பார்த்து நேரில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்.

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் 40 வருடமாக ஒரே குடி மனோபாலா இறப்பிற்கு இதுதான் காரணம் என பெரும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது பொதுவாக சினிமாவில் உள்ள இயக்குனர்கள் டிஸ்கஷன் என்ற பெயரில் குடிக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து நூற்றுக்கு 99 டிஸ்கஷன் பேஸ்டு ஆன் ஆல்கஹால் என மாறிவிட்டது. கவிஞர் கண்ணதாசனும் சாப்பிடுவார் அது வேற விஷயம் ஆனால் எல்லாரும் தன்னுடைய படைப்பாற்றலையும் கற்பனைகளையும் வாலத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மது அருந்திவிட்டு டிஸ்கஷனில் இருக்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் ஒரு மணி இரண்டு மணி ஆகும் சில காலம் விடிய காலை வரை டிஸ்கஷன் போய்க்கொண்டே இருக்கும் சிப்ஸை என அனைத்தையும் சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள், ஒரு ஆளு முக்கா பாட்டில் அடித்து விடுவார்கள் அது அதிகமான மது ஆபத்தை விளைவித்து விடும் குடி குடியை கெடுக்கும் இது ஆனா குடும்பத்தையே கெடுத்து விடும்.

காலையிலிருந்து ஷூட்டிங் என்ற பெயரில் பொதுவாக இயக்குனர்கள் டென்ஷனில் இருப்பார்கள் அதனால் லைட்டா குடிப்பார்கள்  ஆனால் அந்த குடி இன்னும் டென்ஷனை அதிகமாகிவிடும். இப்படி அதிகமாக குடித்து வந்தால் கல்லீரல் பாதிக்கப்படும் தொடர்ச்சியாக சிறுநீரகம் செயல் இழக்கப்படும் அப்புறம் ஒரு ஒரு உறுப்பாக பாதிக்கப்படும் என்பது டாக்டர் கருத்து என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

டாக்டர் பொதுவாக நீங்க கொஞ்சம் தண்ணிய கம்மி பண்ணலாமே என கூறினால் உடனே அதற்கு அதை மட்டும் கம்மி பண்ண முடியாது கொஞ்சம் வேணா கம்மி பண்ணிக்கிறேன் என கூறுவார்கள் டாக்டர் நான் சொல்லிட்டேன் அதுக்கப்புறம் உங்க விருப்பம் என கூறி விடுகிறார்கள். அப்படிதான் மனோபாலா 40 வருடமாக தண்ணிக்கு அடிமையாகி விட்டார். தண்ணி அடிக்காமல் தூங்க முடியாது என்ற அளவுக்கு அந்த போதையானது  அடிமையாகிவிட்டார்.

எனக்கு தெரிந்து பல சம்பவங்கள் நடந்திருக்கு அதாவது வெண்ணிடாரை மூர்த்தி ரம் அடிப்பார் அந்த சமயத்தில் மனோ பாலா வந்துள்ளார் என்ன மூர்த்தி என்ன கூப்பிடவே இல்ல என கேட்டுள்ளார் அதற்கு பையன் கிட்ட சொல்லி அனுப்பிச்சி இருக்கேன் என ஏதோ சொல்லி சமாளித்தார் பின்பு இருவரும் தண்ணி அடிக்க ஆரம்பித்தார்கள் மூன்று பேக் போனது சார் என கூப்பிட்டார் அப்புறம் வாங்க போங்க என கூறினார் அதுக்கப்புறம் வாடா போடா அப்புறம் செவுலில்  பலர் என அறைந்தார்  இது நடந்தது முதுமலை காட்டில் அப்பொழுது இயக்குனர் மனோபாலா அந்த திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது மனோபாலாவை நான்தான் குண்டுகட்டாக தூக்கி அவர் ரூமில் கொண்டு விட்டேன் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதேபோல் இளமை காலத்தில் மனோபாலா பட்ட அடி கொஞ்ச நஞ்சம் கிடையாது பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் கதா  நாயகனாக மாறினார் அதன் பிறகு இயக்குனராக மாறிவிட்டார் பாக்யராஜ்.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த மனோபாலாவை டைரக்டராக மாற்ற வேண்டும் என விரும்பினார் கலைமணி இந்த நிலையில் மனோபாலா ரஜினியை வைத்து இயக்கிய திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதன் பிறகு 30க்கும் மேற்பட்ட  திரைப்படங்களை தொடர்ந்து இயக்கினார். ஆனால் இந்த அனைத்து திரைப்படங்களும் மற்றவர்களின் கதைதான். அந்த மாதிரி சமயத்தில் தான் மனோபாலா மது போதைக்கு அதிகமாக அடிமையானார் என பயில்வான் ரங்கநாதன் உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment