கண்ணாடி அறையில் அடைக்கப்பட்ட மணிரத்தினத்தின் மகன்.! எதற்காக தெரியுமா.? வைரலாகும் வீடியோ.

உலகம் முழுவதும் வைரஸ் பரவி வருகிறது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான், அதே போல் இந்தியாவிலும் பல இடங்களில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது, இதனை கட்டு படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் கல்லூரி, பள்ளிக்கூடங்கள், மால்கள், திரையரங்குகள் ஏசி கடைகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மேலும் மணிரத்தினத்தின் மகன் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கண்ணாடி அறையில் இருக்கிறார் மணிரத்தினம் மகன்.

அப்பொழுது சுகாசினி கண்ணாடிக்கு அருகில் பத்தடி தொலைவில் நான் இருக்கிறேன் என கூறினார், மணிரத்தினத்தின் மகன் நந்தன் லண்டன் சென்று வந்ததால் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளார்கள், இதை அவரே கூறியுள்ளார்.

இது அவருக்கும் மற்றவர்களுக்கும் நல்லது என கூறியுள்ளார். இதுபோல் ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் இந்த கொரோனா நோயிலிருந்து வென்று விடலாம்.

Leave a Comment

Exit mobile version