குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி வேறு தொழிலில் இறங்கிய மணிமேகலை.! வைரல் புகைப்படம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள் அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒரு தூணாக விளங்கியவர் தான் தொகுப்பாளர் மணிமேகலை.

குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட முழுக்க முழுக்க காமெடி கலாட்டா நிறைந்து அமைந்ததால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்பொழுது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக பங்கு பெற்று வந்தவர் தான் மணிமேகலை.

4வது சீசனிலும் பங்குபெற்று வந்த நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாக இவர் தன்னுடைய சமூக வலைதளாக பக்கத்தில் பகிர அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் மணிமேகலையை மீண்டும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி புகழை பேட்டி எடுத்த பொழுது எதற்காக மணிமேகலை வெளியேறினார்கள். அவர் கர்ப்பமாக இருக்கிறாரா எனக் கேட்டனர் அதற்கு கோபமடைந்த புகழ் இப்படியெல்லாம் நீங்க பேசாதீங்க அவங்க பர்சனல் விஷயங்களால் வெளியேறினாங்க நீங்களே வதந்திகளை பரப்பாதீங்க அப்படி கர்ப்பமாக இருந்தால் மகிழ்ச்சி தான் என கூறினார்.

manimegalai

இப்படிப்பட்ட நிலையில் எதற்காக மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது சரியாக தெரியாமல் இருந்து வரும் நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே இதனை பார்த்த ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விவசாயம் செய்ய தொடங்கி விட்டதாக கூறி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version