மணிரத்தினத்தின் கனவு திரைப்படத்தை தவிடுபடியாக்க போகும் தனுஷ்..! இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியலையே..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் இவருடைய நடிப்பில் வெளியானது இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் இவர் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படமானது மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளார்கள்.

பொதுவாக நடிகர் தனுஷ் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்வது வழக்கம் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளார் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பெயர் நானே வருவேன் என்று வைக்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை தனுஷின் அண்ணன் செல்வராகவன் அவர்கள் தான் இயக்கியுள்ளார்.

மேலும் கலைபுலி எஸ் தானு தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் பல்வேறு பணிகளும் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் முப்பதாம் தேதி என்றும் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படகுழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் அதே நாளில் தான் பொன்னியின் செல்வம் திரைப்படம் ஐந்து மொழிகளில் உலகம் எங்கும் ரிலீஸ் ஆக உள்ளது.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் ஏனெனில் பொன்னியின் செல்வம் மிகப் பெரிய அளவில் பொருட்செலசு மற்றும் முதலீடு போட்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்துடன் நானே வருவேன் திரைப்படம் போட்டி போட போகிறதா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment