பதுங்கி கிடந்தது பெரும்புலியை வளைச்சுபோட்ட நடிகை மாளவிகா மோகனன்..!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரீ கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் மாளவிகா மோகனன்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை இதற்கு முன்பாகவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தில் கூட நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அவரை பார்க்கும் பொழுது வயது முதிர்ந்த கதாநாயகி என்று பலரும் நினைத்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் அவற்றை முறியடித்தார். பின்னர் நமது நடிகை மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவான மாறன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தற்பொழுது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்களான் என்ற திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்திற்காக நடிகை மாலாவிக்கா மிகவும் கடுமையான பயிற்சிகளை கூட அசால்டாக செய்து வருவதாக கூறப்படுகிறது இவ்வாறு பிரபலமான நமது நடிகை எப்படியாவது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை சரமாரியாக இறக்கி வருகிறார்.

என் நிலையில் நமது நடிகைக்கு பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஏற்கனவே பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இந்நிலையில் அவர் நடிக்க போகும்  திரைப்படத்தை மாருதி இயக்குவது மட்டுமில்லாமல் இதில் ஹீரோவாக பிரபாஸ் மற்றும் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்க உள்ளார்.

malavika
malavika

இதனை நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரசிகர்களிடம் பேசுகையில் அவரே கூறியுள்ள தகவல் என்பதன் காரணமாக இவை சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment