அஜித்தை வைத்து படம் பண்ணுவது சாதாரண விஷயம் அல்ல – லோகேஷ் கனகராஜ் பேட்டி.!

தமிழ் சினிமாவில் அதிக தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒரே நடிகர் அஜித் தான். அவர் அந்த இடத்தில் இருக்க முக்கிய காரணம் ரசிகர்கள் தான் தோல்வி படங்களை கொடுத்தாலும் ரசிகர்கள் அவரை விட்டு பிரியாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

சினிமாவையும் தாண்டி அவர் நிஜத்திலும் நேர்மையாக இருப்பதால் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துப்போனவராக இருக்கிறார் அந்த ரசிகர்களுக்காக அண்மைக்காலமாக நடிகர் அஜித் ரொம்ப மெனக்கெட்டு படங்களில் நடிக்கிறார் அந்த படங்கள் வெற்றியை ருசிக்கின்றன. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம்.

சுமாரான வெற்றியை பெற்றது அதனைத் தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், தெலுங்கு பட நடிகர் அஜய் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட இருக்கிறது. அஜித்தும் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டதால் தற்பொழுது ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ரெடியாக இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் கே ஜி எஃப் படத்தில் நடித்த சஞ்சய் தத்தும்..

இப்படத்தில் நடித்து வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது. இந்த சமயத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அஜித் பற்றி பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. நடிகர் அஜித்தை வைத்து படம் பண்ண எனக்கும் ஆசை தான் அவரை வைத்து படம் எடுப்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல.. அது நடந்தால் எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான் என லோகேஷ் கூறி உள்ளார்.

Leave a Comment