தமிழ் சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்துக் கொண்டே போகிறது சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் அதை பிடித்து எப்படியாவது படிப்படியாக முன்னேறி விடலாம் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர்கள் தனியாக ஒரு திரைப்படத்தை இயக்கி மக்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்கள்.
அந்த வகையில் மக்கள் மனதில் பெயர்பெற்ற இயக்குநராக பாதியப்படுபவர்களில் சமுத்திரகனியும் ஒருவர். இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அந்தவகையில் இவர் இயக்கத்தில் ஆசிரியர் மாணவர்களை வைத்து வெளியாகிய திரைப்படம்தான் சாட்டை.
இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது அதுமட்டுமில்லாமல் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மகிமா நம்பியார். இவர் சாட்டை திரைப்படத்தில் அறிவழகி என்ற கதாபாத்திரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், புரியாத புதிர், கொடி வீரன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதேபோல் விக்ரம்பிரபு நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் தான் நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு படிப்படியாக தன்னுடைய திறமையை நிரூபித்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் சாட்டை திரைப்படத்தில் நடிக்கும் பொழுது பள்ளி பருவ பெண்ணை போல் இருந்தார் ஆனால் தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மார்டனாக உலா வருகிறார்.
இவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.