வந்துட்டேன்னு சொல்லு மறுபடியும் நான் வந்துட்டேன்னு சொல்லு…! வைரலாகவும் மகாலட்சுமியின் வீடியோ.

ரசிகர்கள் பெரிதாக கொண்டாடப்படும் பிரபலங்களில் ஒருவர் மகாலட்சுமி. இவர் முதன் முதலில்  சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது மீடியா பயணத்தை தொடங்கினார் அதில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம் அந்த அளவு மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கி வந்தார். அதுமட்டுமில்லாமல் சன் மியூசிக்கில் தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்தவர்.

தற்பொழுது இவர் சன் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் அன்பே வா என்ற தொடரில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதற்கு காரணம் காதல் கொண்ட காட்சி இந்த தொடரில் இருப்பதால்தான். மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவர் திருமணத்திற்கு பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் மீண்டும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இவர்கள் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.

பலர் வாழ்த்து கூறினாலும் ஒரு சிலர் விமர்சனம் செய்தார்கள் மேலும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் திருமணத்தை மக்கள் ஏதோ பிரபலமாக பேச அது மிகப்பெரிய வைரலானது. திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி பெரிதாக நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில் தற்போது வழக்கம் போல் திருமணத்திற்கு பிறகும் தனது வேலைகளை தொடர்ந்து உள்ளார் மகாலட்சுமி.

அந்த வகையில் முழு மேக்கப் போட்டுக் கொண்டு நகைகளை அணிந்து கொண்டு போட்டோ சூட் ஒன்று நடத்தி உள்ளார் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதோ அவரின் வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment