விஜய் ஆண்டனி ட்விட்க்கு தரமான கேள்வி எழுப்பிய மதுரை முத்து.! இதுக்கு என்ன சொல்ல போறீங்க.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த திரைப்படத்தில் அமைந்த நான்கு நிமிட காட்சியை டிரைலராக வெளியிட்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அப்போது உடம்பில் காயகங்களும் ஏற்பட்டு இருக்கிறது இந்த நிலையில் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட விஜய் ஆண்டனி மறுபடியும் படப்பிடிப்பை தொடர்ச்சி செய்தார்.

ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி போட்ட ஒரு ட்விட்டர் பதிவு இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது விஜய் ஆண்டனி போட்டோ பதிவு என்னவென்றால் வடக்கனும் கிழக்கனும் தேற்க்கணும் மேற்கணும் நம்மைப் போல தான்.

குடும்பத்தை கஷ்டப்பட்டு காப்பாற்ற வேண்டும் என்று தினமும் போராடி வாழ்கிறான் இவனும் இன்னொரு சக ஏழை மனிதன் தான் என்று குறிப்பிட்டுள்ளார் அது மட்டுமல்லாமல் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் பதிவிட்டு இருக்கிறார். வடக்கர்கள் தமிழகத்தில் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது இந்த பதிவை பார்த்த பலரும் நடிகர் விஜய் ஆண்டனி விலாசி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியின் மூலம் பிரபலமான மதுரை முத்து அவர்கள் விஜய் ஆண்டனிக்கு தரமான கேள்வியை எழுப்பி இருக்கிறார் இவருடைய இந்த பதிவிற்கு விஜய் ஆண்டனி பதிலளிப்பாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது விஜய் ஆண்டனி போட்ட ட்விட்டுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுரை முத்து அவர்கள் “ஏன் விஜய் படத்தை வெளியிடக் கூடாது என்று சொன்னார்கள்? உழைக்கட்டும் ஆனால் ஆள நினைக்க கூடாது” என்று மதுரை முத்து அவர்கள் விஜய் ஆண்டனியின் ட்விட்டுக்கு எதிர்ப்பதிவு போட்டு இருக்கிறார்.

Leave a Comment