எம். ஜி. ஆர் பேச்சை கேட்டகாத ஒரே ஒரு ஹீரோ இவர் தான் – ஓபன்னாக சொன்ன பிரபல நடிகர்.

தமிழ் சினிமா உலகில் நம்பர்-ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் பல்வேறு இளம் நடிகர்கள் தொடர்ந்து சிறப்பான படங்களைக் கொடுத்து அசத்தி இருந்தாலும் அவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தொடர்ந்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தன்னை தக்க வைத்துக்கொண்டு வருகிறார்.

ரஜினி மேடைப் பேச்சுகளில் அவ்வப்போது பேசுவது தனக்கு நடந்த சில சிறப்பான சம்பவங்களில் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார் அப்படி ஒரு தடவை பத்திரிகையாளரும், நடிகருமான சோ அவர்களைப் பற்றி பேசினார். சோ அவர்கள் துக்ளக் என்ற பத்திரிகையை சிறப்பாக வழிநடத்தி வந்தார்.

மறுபக்கம் சீரியல்களை கையாளுவதில் கெட்டிக்காரர் அப்படி ஒரு சீரியலை எடுத்து சிறப்பாக வந்து கொண்டிருந்தார். அந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தது ஆனால் திடீரென அந்த சீரியலை நிறுத்திவிட்டார் ஒரு கட்டத்தில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் சோ அவர்களை அழைத்து அந்த சீரியலை ஏன் நிறுத்தி விட்டீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு சிறு வேலை இருக்கிறது அதனால் நிறுத்தி விட்டேன் என கூறி உள்ளார் ஆனால் எம்ஜிஆர் அதை வெகு விரைவிலேயே தொடங்குங்கள் என கூறி உள்ளார். ஆனால் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் இதனை ரஜினி எம்ஜிஆர் சொல்லியும் கேட்காத ஒரே நபர் சோ அவர்கள் தான் என கூறி கலாய்த்தார்.

சினிமாவிலும் சரி , நிஜ வாழ்க்கையிலும் சரி எம்ஜிஆர் மிக நேர்மையாக இருந்த காரணத்தினால் எம்ஜிஆர் எந்த வேலை சொல்லினாலும் உடனே எந்த நபராக இருந்தாலும் உடனே செய்து விடுவார்கள் ஆனால் நடிகர் சோ மட்டும் எம்ஜிஆர் பேச்சை கேட்காத நபராக அப்பொழுது இருந்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment