அதிரடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைக்கா.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்…

சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா நிறுவனம் தற்போது ஒரு பிரம்மாண்ட அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் நாளை காலை 10:30 மணிக்கு ஒரு அப்டேட் வெளியாக இருப்பதாக தற்போது லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆனால் அது எந்த திரைப்படம் குறித்த அப்டேட் என்று விலாவாரியாக கூறாமல் சஸ்பென்ஸ்சாக வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

ஏனென்றால் லைக்கா நிறுவனம் ரஜினியின் லால் சலாம், தலைவர் 171, கமலின் இந்தியன் 2, அஜித்தின் ஏகே 62, எனது தொடர்ந்து முன்னணி  நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது அந்த வகையில் இந்த படங்களில் எந்த படத்தின் அப்டேட்டாக இருக்கும் என தெரியாமல் ரசிகர்கள் பெரும் பதட்டத்தில் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினி அவர்கள் நடிக்க இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அந்த வகையில் நாளைக்கு வெளியாகும் அப்டேட் லால் சலாம் திரைப்படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என்று கூறபடுகிறது. ஆனால் ஏற்கனவே இந்த படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

இதனால் நடிகர் ரஜினி அவர்கள் ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் தலைவர் 171 வது படத்தின் இயக்குனர் யார் என்ற அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின் அப்டேட் கூட நாளைக்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இந்த திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருக்க அஜித் ரசிகர்கள் நாளைக்கு வெளியாகும் அப்டேட் ஏகே 62 படத்திற்கு உரிய அப்டேட்டாக தான் இருக்கும் என அடித்துக் கூறி வருகிறார்கள். அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி என்பது உறுதி செய்யப்பட்ட தகவலாக வெளியாகி இருந்தாலும் அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கும் அப்டேட் நாளைக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது அந்த வகையில் நாளை ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் ஆக இருக்கலாம் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ஏனென்றால் நாளை வியாழன் கிழமை என்பதால் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக அஜித்தின் படங்கள் எப்போதுமே வியாழன் கிழமையில் தான் பல திரைப்படங்கள் வெளியாகியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமல்லாமல் வியாழன் கிழமை அஜித்திற்கு செண்டிமெண்டான நாளாக இருப்பதால் நாளைக்கு வெளியாகும் அப்டேட் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட்தான் இருக்கும் என்று ரசிகர்கள் அடித்துக் கூறி வருகிறார்கள்.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் நாளை காலை 10.30 மணிக்கு எந்த படத்தின் அப்டேட் வெளியாகிறது என்று. இதனால் ரசிகர்கள் மிகுந்த பதட்டத்தில் இருக்கிறார்கள்.

lyca
lyca
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment