தன்னை நாயகனாக அறிமுகப்படுத்துவதற்கு அனைவரும் யோசித்தார்கள் என ‘லவ் டுடே’ பிரதீப் வருத்தம்.!

தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்கான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தின் நூறாவது நாள் விழாவில் தன்னை நாயகனாக அறிமுகப்படுத்த பலரும் யோசித்தனர் என கூறி வருத்தப்பட்டுள்ளார்.  2019ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன்.

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியை ஆங்கில படத்தில் காப்பி அடித்து இயக்கியிருந்தார் எனவே பலரும் இவரை விமர்சித்து வந்தனர். எனவே இந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என லவ் டுடே படத்தில் ஒரு காட்சி கூட காப்பி அடிக்காமல் எடுத்திருந்தார்.

அந்த வகையில் இவருடைய உழைப்பிற்கு ஏற்றார் போல் லவ் டுடே படம் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கோமாளி திரைப்படத்தில் காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலை யில் இந்த படத்தின் கதை அம்சமும் மிகவும் வித்தியாசமான ஒன்றாக அமைந்ததால் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. எனவே கோமாளி திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே திரைப்படத்தினை இயக்கினார்.

இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை இவனா நடித்திருந்தார் மேலும் இவர்களை அடுத்து ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். இவ்வாறு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழகத்தில் இந்த படத்தினை ரிலீஸ் செய்வதற்கான உரிமையை உதயநிதி என்ற அட்சயன் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது.

இப்படிப்பட்ட நிலையில் 100வது நாளை கடந்துள்ள நிலையில் அதற்கான வெற்றி விழா நடைபெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன் தன்னை நாயகனாக அறிமுகப்படுத்த பலரும் யோசித்தனர் ஏஜிஎஸ் நிறுவனம் தான் அறிமுக நாயகனாக இருந்தாலும் பரவாயில்லை என்று கதையின் மீது நம்பிக்கை வைத்து லவ் டுடே படத்தினை இயக்கினார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் கோமாளி படத்தின் வெற்றிக்கு பெரிதாக திரைத்துறையில்தனக்கு பாராட்டுக்கள் கிடைக்கவில்லை எனவும் வருத்தமாக பதிவு செய்துள்ள நிலையில் லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய மகிழ்ச்சியினை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் மேலும் தன்னுடன் பணியாற்றி அனைத்து கலைஞர்களுக்கும் நன்றியும் தெரிவித்தார்.

Leave a Comment