காதல் தோல்வியா..? கையில் இருக்கும் பிளேடு கீறல்களை மறைக்க ஜாக்குலின் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.!

தொகுப்பாளினிகளுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் நடிகைகளுக்கு இணையாக அதிகரித்துள்ளது இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் டிடி விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வாழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜாக்குலின். இவர் கீச்கீச் குரலால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறார் அதுமட்டுமில்லாமல் வசீகர தோற்றமும் நல்ல குரல் வளமும் இருப்பதால் தொகுப்பாளினியாக நீண்டகாலம் இருந்து வருகிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களில் ஜாக்குலின் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்து பிரபலமடைந்தார்.

அது மட்டுமில்லாமல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்திலும் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஜாக்குலின் சமீப காலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பிரபலமடைந்து வருகிறார். மேலும் இவர் தேன்மொழி என்ற தொடர் மூலம் இளசுகளையும் கவர்ந்து வருகிறார்.

jaqualine
jaqualine

சமூக வலைதளத்தில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஜாக்குலின் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது கையில் டாட்டு ஒன்றைப் போட்டு அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆனால் அந்த புகைப்படத்தில் அவரது கையில் பிளேடால் கீறி கீறி இருக்கும் சில காயங்களும் தெரிகிறது ஒருவேளை அதை மறைக்கத்தான் இதுபோல் செய்துள்ளாரா என ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் இதுவரை ஜாக்குலின் தன்னுடைய காதல் குறித்த காதல் தோல்வி குறித்து எந்த ஒரு பேட்டியிலும் பேசியதே கிடையாது அப்படி இருக்கும் வகையில் இந்த பிளேடு கீறல் எப்படி வந்தது என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.  ஆனால் காதல் தோல்வியால் தான் இப்படி செய்துள்ளார் என சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment