யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து – நீ இன்னும் சாகலையா என கேட்ட நபர்.! பதிலுக்கு யாஷிகா கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா.?

மாடலிங் துறையில் தனது அழகை காட்டி வந்த பிரப்பலங்கள் ஒரு கட்டத்தில்  சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் வாய்ப்புகள் கிடைக்கும் அதை திறம்பட கையாண்டு அதன்பின் இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் அந்த வகையில் யாஷிகா ஆனந்த். முதலாவதாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது அசாதாரண திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் வெளியே வந்த அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன. ஜாம்பி என்ற படத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு அழகை காட்டி  நடித்திருந்தார்.  இவர் பெரிதும் தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்தும் கவர்ச்சியாக இருக்கிறது.

போதாத குறைக்கு  இன்ஸ்டா பக்கத்திலும் இதுபோன்றுதான் செய்து வருகிறார் என கூறி அவரை கவர்ச்சி கன்னியாக பார்த்தனர். இதை உணர்ந்த யாஷிகா முற்றிலுமாக மாற்றி கொள்ள இவர் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வகையில் கடமையை செய், இவன் தான் உத்தமன், சல்பர் ஆகிய திரைப்படங்கள் இவரது கதா பாத்திரம் வித்தியாசமான உருவாகின இப்படி போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு நாள் தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்று சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும்போது மகாபலிபுரம் அருகே எதிர்பாராதவிதமாக கார் விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் தோழி உயிரிழந்தார் மற்றவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர் அதிலும் குறிப்பாக யாஷிகாவுக்கு முதுகில் அடிபட்டு ஆபரேஷன் செய்து மூன்று மாதங்கள் கழித்து தான் நடக்க ஆரம்பித்தார் படிப்படியாக உடலை வருத்தி எப்படியோ நடக்க ஆரம்பித்தார். அண்மையில் நன்றாக நடக்க ஆரம்பித்ததை அடுத்து ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்று வந்தார் அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் தீயை பரவின.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர் ஒரே ஒரு ரசிகர் மட்டும் நீ இன்னும் சாகலையா என கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த யாஷிகா “நான் சீக்கிரம் சாவதற்கு இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்” என கூலாக பதில் அளித்தார்.  இதை அறிந்த யாஷிகா ரசிகர்கள் அந்த நபரை கமெண்ட் மூலம் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Leave a Comment