காசுக்கு ஆசைப்பட்டு “கைதி 2” படத்தை தள்ளி போடும் லோகேஷ் – தெலுங்கு ஹீரோ உடன் இணைய திட்டம்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே பிளாக்பஸ்டர் மூவிகளாக அமைய அவரது வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் முன்னணி இயக்குனர்கள் முதற்கொண்டு இளம் இயக்குனர்கள் வரை லோகேஷ் வளர்ச்சியின் மேல் சற்று பொறாமையில் இருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக கடைசியாக கமலுடன் இணைந்து விக்ரம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு விமர்சனங்களை பெற்று வந்ததோடு மட்டுமல்லாமல் வசூலிலும் உலக அளவில் 430 கோடிக்கு மேல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியோடு லோகேஷ் கனகராஜ் அடுத்து அடுத்து சில படங்களை இயக்க உள்ளார்.

ஆம் தளபதி விஜய் தற்போது தனது 66 வது திரைப்படம் மன வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தனது 67 வது திரைப்படத்தில் நடிப்பார் என தெரிய வருகிறது. மேலும் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கைதி படத்தின் இரண்டாம் பாகமும் லோகேஷ் எடுக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அதனால் இந்த ரெண்டு படத்தின் மேலும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். ஆனால் கைதி 2 படம் தற்போது உருவாக வாய்ப்பில்லையாம் இந்த படம் இன்னும் மூன்று வருடங்களுக்கு பிறகு தான் உருவாகுமாம். அதனால் லோகேஷ் விஜயின் படத்தை முடித்துவிட்டு தெலுங்கு பக்கம் திசை திரும்ப உள்ளாராம். தெலுங்கில் டாப் ஸ்டார் ஆக வலம் வரும் பிரபாஸை வைத்து அடுத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளார்.kaithi

இந்த படத்தை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. லோகேஷ் படத்தின் கதையை கூறும் போதே தயாரிப்பு நிறுவனம் அவரிடம் 6 கோடியை கொடுத்து புக் செய்துவிட்டதாம் நடிகர் பிரபாஸ் தற்போது கே ஜி எஃப் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment