இரும்பு கை மாயாவி படம் குறித்து முதல் முறையாக பேசிய லோகேஷ்.! கைதி 2 அவ்வளவுதான் போல..

இளம் இயக்குனர்கள் அண்மைக்காலமாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான்  கடைசியாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார் அந்த படமும் முழுக்க முழுக்க சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்த திரைப்படமாக இருந்ததால்..

ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது இந்த படம் தற்பொழுது வரை மட்டுமே சுமார் 420 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது மேலும் விக்ரம் திரைப்படம் 75 நாட்களை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 கைதி 2, விக்ரம் அடுத்த பாகம், சூர்யாவின் இரும்பு கை மாயாவி ஆகிய திரைப்படங்களை இயக்க முடிவு எடுத்துள்ளார்.

இந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு முன்பாகவே லோகேஷ் சூர்யாவை சந்தித்து இரும்பு கை மாயாவி கதையை சொன்னாராம் நடிகர் சூர்யாவுக்கு அது ரொம்ப பிடித்து போனதாம். அதன் பிறகு சூர்யா லோகேஷ் கனகராஜை  எப்பொழுது  பார்த்தாலும் இரும்புக்கை மாயவி படத்தை எப்போ எடுப்பீர்கள் என கேட்பாராம். இந்த படம் அப்பொழுது தள்ளி போக காரணம்..

பட்ஜெட் காரணங்களால் அந்த படத்தை உடனே இயக்க முடியவில்லை ஆனால் அதன் கதையை நான்கு வருடங்களாகவே எழுதி வருகிறேன் என லோகேஷ் கூறினார் இரும்பு கை மாயாவி எப்பொழுது வேண்டுமானாலும் தொடங்கலாம் ஆனால் கைதி 2ஸ்கிரிப்ட் இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது.

இந்த இரண்டில் எது முதலில் தொடங்கும் என இப்பொழுது என்னால் சரியாக சொல்ல முடியவில்லை ஆனால் சூர்யாவை வைத்து நிச்சயமாக இரும்பு கை மாயாவி படத்தை எடுப்பேன் என பிடிவாதமாக சொல்லி உள்ளார். இச்செய்தி தற்பொழுது சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் இந்த செய்தியை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அசதி வருகின்றனர்.

Leave a Comment