ரஜினி கேட்டும் முடியாது என்று மறுத்துவிட்ட லோகேஷ் கனகராஜ்.! அப்போ அடுத்த படம் தலைவர் கூட இல்லையா.?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது நெல்சன் திலிப் குமாருடன் இணைந்து ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எப்படியாவது வெற்றி படமாக அமைய வேண்டும் என்று இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினியும் பல திட்டங்கள் தீட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் பல மொழி சூப்பர் ஸ்டார்களை களமிறக்கி இருக்கிறாராம் நெல்சன் திலிப் குமார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தை முடித்தவுடன் அடுத்ததாக தனது கடைசி படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் ரஜினி.

மேலும் ரஜினியின் கடைசி படம் என்பதால் இந்த படுத்திருக்காங்க பல இயக்குனர்கள் கதையை கையில் வைத்துக் கொண்டு வரிசையில் நிற்கிறார்கள் ஆனால் கடைசி படம் என்பதால் நடிகர் ரஜினிக்கு ஒரு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்க இந்த படத்தை கமல் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது ரஜினி அவர்கள் கேட்டும் முடியாது என்று மறுத்துவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்குனர் லோகேஷ் தற்போது லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் முடிந்தவுடன் அடுத்ததாக கார்த்தியை வைத்து கைது 2 மற்றும் விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ரஜினி படத்தை வேண்டாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது ஆனால் இந்த தகவல் பொய்யான தகவலாக இருக்கும் என கூறப்படுகிறது ஏனென்றால் சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகர்களை வைத்து எப்படியாவது ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்.

அப்படி இருந்தும் நடிகர் ரஜினியை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தால் லோகேஷ் எப்படி மறுக்க முடியும் அது மட்டுமல்லாமல் ரஜினி அவர்கள் லோகேஷை கூப்பிட்டு தனக்கு ஒரு படத்தின் கதையை ரெடி பண்ண சொல்லி இருந்த தகவலே உறுதி செய்யப்படாத தகவல் இப்படி இருக்கும் நிலையில் எப்படி ரஜினியின் படத்தை அவர் நிராகரிக்க முடியும் என்று தலைவர் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version